நீண்ட கடற்கரை ஒன்றில்
கருப்புச் சேலை அணிந்த பெண் நடந்துகொண்டிருக்கிறாள்
கரையெங்கும் இருள் அலை அலையாய் அலைந்துகொண்டிருக்கிறது
அந்த அலையினூடே அவளின் நடை சுருதியிழந்திருக்கிறது
அவள் வந்த பாதையில் உலர்ந்து கிடக்கிறது இரத்தத் தடம்
கண்ணெதிரே தெரியும் கோயிலொன்று
அவள் அருகே செல்லச் செல்ல
இடம்பெயர்ந்துகொண்டேயிருக்கிறது
அவள் அடைய வேண்டிய இடமது
நீண்ட யுகங்களாக.
Thursday, May 12, 2005
Subscribe to:
Posts (Atom)