Tuesday, August 24, 2004

இயல்பாய் (கவிதை)


இயல்பாகவே நிகழவேண்டும் எந்தவொன்றும்
மெல்லிய சாரல் விழுந்த நேரத்தில் மண்வாசம் கிளர்ந்த மாதிரி
என்று தொடங்கியதென சொல்லமுடியாத நம்நட்பு மாதிரி
எந்தக் கணத்தில் காலை புலர்ந்ததென அறியமுடியாத மாதிரி
பெருக்கிய அறையில் தூசி சேர்கிற மாதிரி
தொடங்கிய நேரம்தெரியாமல் வியாபிக்கிற பசி மாதிரி
என்றேனும் நிகழப்போகும் நம்நட்பின் பிரிவுகூட
ஒரு கவிதை போல, என் இயல்பைப் போல
ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பிணமாகிப் போன மனிதன் போல
பிரிந்த சுவடில்லாமல் நிகழ எதிர்பார்க்கிறேன்
இயல்பான எந்தவொன்றும் என்னை மகிழச்செய்கிறது
இயல்பிழந்துபோன நம்நட்புக்கு
பிரிவில் மகிழல் இயல்பென பிரிவோம்

1 comment:

Anonymous said...

உங்கள் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.
வாழ்த்துக்கள்,
கண்ணன்.