Monday, August 30, 2004

வீரவநல்லூர் (கவிதை)

வீரவநல்லூரைப் பற்றிய கவிதை கண்டிப்பாய் எழுதவேண்டும்
முதல்வரியாய் "அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது",
இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்
சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸ¤ம்.
ஊரின் செழுமைக்கு
சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக்கூழ் கொஞ்சம்.
மழை வர்ணனையும்
தெருவில் திரிந்த பசுக்கள் பற்றிய குறிப்பும் அவசியம்.
ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,
சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,
கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக்கல்,
பள்ளிக்கூடம், பொது லைப்ரரி எனத் தேடிப்பிடித்து
வார்த்தைகளை வளைத்தால்
வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்
பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.
ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.


No comments: