உடுக்கையொலியின் இடைவெளிக்குள்
பொதிந்திருக்கும் மௌனத்தை
ஒலியாக்கி ஓங்காரமாக்கி
நிலம் கீறிடும் விதைக்குள்
பெருநிழலைப்பரப்பி
அக்கணத்தின் பேரதிர்வைப்
பின்னாளில் சுழியாக்கி
மரணங்களைக்கூட விழாவாக்கி
தன்னை நிறுவிக்கொள்ளும்
காலத்தின் இடையறாத ஓட்டம்
கணக்கில் கொள்ளுமா
ஒரு இரயில் பூச்சியை மிதித்து நசுக்க
நான் செலவிடும் சொடுக்கு நேரத்தை.
Sunday, September 05, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment