Friday, September 24, 2004

பாகல் (கவிதை)


ஆகவே பாகற்காயைப் பற்றி எழுதலாம்.

கொடியெங்கும் சிறிது சிறுதாய்க் காய்த்துத் தொங்கும்
பாகற்காய்கள் மனமெங்கும் பசுமையைப் பரப்புகின்றன
சந்தையில் நல்ல விலைபோகும்
மிதிபாகற்காய்களுக்கு எப்போதுமே மவுசு
கசப்பையும் மீறி அவை விரும்பப்படுகின்றன
சில மனிதர்களைப் போலவே
வராட்டியில் தட்டி பதனப்படுத்தப்பட்டிருக்கும்
பாகல் விதைகள் சுவர்களுக்கு அழகூட்டுகின்றன
சுவற்றில் வராட்டியின் தடத்தில் எறும்புகள் மொய்க்கின்றன
நேற்று ஒரு வராட்டியை உடைத்து
சில பாகல் விதைகளை விதைத்தேன்
நேற்றே விதைகளை விதைத்துவிட்டேன்
ஆகவே பாகற்காயைப் பற்றி நான் எழுதலாம்
கனவு பாகல் விதை முளைக்காமல் போனாலும்
மொய்க்கும் எறும்புகளிலும்
அதில் பூத்திருக்கும் இக்கவிதையிலும்
பாகற்காய் காய்த்திருக்கிறது

No comments: