Saturday, September 11, 2004

இருப்பின் மீதான கேள்வி (கவிதை)



அலையும் சிறுத்தையில் பொதிந்திருக்கும்
என் விழிப்பை
நாசியுள் புகுந்து தூக்கிப் பறக்கும்
மண்வாசத்தில் பரவிக்கிடக்கும்
என் வீச்சை
காற்றைக் கிழிக்கும் தீயின் வேகத்தில்
இழைந்திருக்கும்
என் இருப்பை
ஒரு வெள்ளத்தின் வேகத்தில் அலைந்துகொண்டிருக்கும்
என் வேகத்தை
சற்றே நிறுத்திப் பார்க்கிறது
விளக்கொளியைத் தேடும் ஒரு விட்டிற்பூச்சி

No comments: